நாத ப்ரும்மம் 3
மார்ச் 3, 2005 ஆல் Srikanth
இந்த நிதி சால சுகமா கீர்த்தனை விசேஷமானது…
ஏ மனமே நிதி.. செல்வம் ஒரு சுகமா?
இந்த கேள்விக்கு யார் பதில் சொல்வது? அவரவர் மனம் தான் பதில் சொல்லவேண்டும்.மனமோ மயங்கி கிடக்கிறது.
பத்ருஹரி வைராக்கிய சதகத்தில் இப்படி சொல்கிறார்…
अवश्यं यातरश्चिरतरमुशित्वापि विशया वियोगे को मेदस्तयजति न जनो यत्स्वयममून् ।
व्रजन्त: स्वातन्त्र्यादतुलपरितापाय मनस: स्वयं त्यक्ता ह्योते शमसुखमनन्तं विदयधति ॥
அவஸ்யம் யாதராஸ் சிரதரம் உஸித்வாபி விஷயா
வியோகே கோ பேதஸ்த்யாஜதி ந ஜானோ யத் ஸ்வயம் அமுன:
வ்ரஜந்த: ஸ்வாதந்த்ரயாத அதுலபரிதாபாய மனஸா:
ஸ்வயம் த்யாக்தா ஹ்யதே ஷம்சுகம் அனந்தம் வித(த)தி:
எவ்வளவு காலம் இருந்தாலும் இந்த உலக பொருள்கள் மறையவும் விட்டு செல்லவும் கூடியவை.அப்படியெனில் நான் அவற்றை விடுவதற்கும் அவை என்னை விடுவதற்கும் என்ன வேறுபாடு?அப்படியெனில் நல்லவர்கள் ஏன் பற்றறுப்பதில்லை? ஸர்வ சுதந்திரமாக பொருள்களிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் ஒருவன் விலகினால் அது அளவற்ற ஆனந்தத்திலும் நிம்மதியிலும் முடியாதோ?அதனாலேயே பொருளாசையை விட்டொழிக்க வேண்டும்…
இல்லை… முடியாது… நான் பற்றிய சம்சார பற்று என்னை விடாதெனில் இதுதானே எல்லார் வாழ்விலும்நடக்கிறது…
निवृत्ता भोगेच्छा पुरुशबहुमानोपि गलितस्समाना: स्वर्याता सुपदि सुहृदो जीवितसमा ।
शनॅर्यष्ट्शृत्थनं घनतिमिररुध्दे च नयने अने मृट: कायस्तदपि मरणापायचकित:
நிவிர்த்தா போகேச்ச புருஷபஹுமானொபி கலிதா
ஸமானா ஸ்வர்யதா: சபதி சுஹ்ரிதோ ஜீவிதஸமா:
சனைர் யஸ்தி உத்தானம் கநதிமிர ருத்தே ச நயனே
அஹோ மூட: க்யாஸ் ததபி மரணாபாயசகித:
என் ஆசைகள் கரைந்து போகின்றன. என் மக்களிடையே என் புகழ் குறைகிறது. என் கூட இருந்த சக நண்பர்கள்இரக்க குணமுள்ளவர்கள் துன்பத்திலும் துணையிருந்தவர்கள் பிரிந்து போகிறார்கள். எழுந்து நிற்பதற்கே ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. பார்வையும் மங்கிவிடுகிறது. அஞ்ஞானத்தில் உழன்ற உடல் மட்டும் இன்னும் இறப்பைநினைத்து அஞ்சுகிறது. இந்த நிலையிலும் விட்டு பிரிவதை - மரணத்தை - மனது ஏற்று கொள்வதில்லை. இது எவ்வளவு விந்தை…
அஞ்ஞானம் என்பது “தான்” என்பது இந்த மாமிச உடலே என்று நினைக்கப் பண்ணுகிறது. இந்த உடலை காப்பதற்கும் இதன் சுகம் தேடுவதற்குமே தவிக்கிறது. இந்த மனுஷ சரீரம் அநித்யம் என்பதை உணராது அஞ்சுகிறது - வருந்துகிறது…
விஷயத்திற்கு வருவோம்…
தியாகையரும் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்…
மநஸா, நிதி சால சுகமா… ராமுனி சந்நிதி சேவ சுகமா?
நிஜமுக பல்கு - உண்மையை சொல்லு !
அனுபல்லவியில்
ததி நவநீத க்ஷீரமுலு - தயிர் வெண்ணை பால் - ருசோ - ருசியோ?
தாஸரதி த்யான பஜன சுதா ரசமு ருசோ ?
சரணத்தில்
தம ஸம மநு கங்கா ஸ்நாநமு சுகமா?
பாவத்தை போக்கும் கங்கையில் குளிப்பது புனிதமா?
கர்த்தம துர்விஷய கூபஸ்நாநமு சுகமா?
இந்த்ரிய சுகம் தேடும் துர்க்கந்தமான இவ்வாழ்வுக்கு ஒப்பான கிணற்று நீர் குளியல் சுகமா?
(எவ்வளவு பெரியது தூய்மையானது ஞானம்? எவ்வளவு தூய்மையற்றது அஞ்ஞானம்… என்பது உள்ளடக்கம்)
மமத பந்தன யுத நரஸ்துதி சுகமா?
அகங்காரமுள்ள மனிதர்களை புகழ்வது சுகமா?
ஸுமதி த்யாகராஜநுதுநி கீர்த்தந
நல்ல புத்தியுள்ள தியாகராஜனால் புகழப்பட்ட ராம கீர்த்தனம் சுகமா?
முழுப்பாடலும்:
பல்லவி:
நிதி சால ஸுகமா ராமுநி ஸந்
நிதி ஸேவ ஸுகமா - நிஜமுகபல்கு மநஸா
அனுபல்லவி:
ததி நவநீதக்ஷீரமுலு ருசோ - தாஸரதி
த்யானபஜந ஸுதா ரஸமு ருசோ
சரணம்:
தம ஸம மநு கங்கா ஸ்நாநமு ஸுகமா கர்த்தம
துர்விஷய கூப ஸ்நாநமு ஸுகமா
ஸுமதி த்யாகராஜநுதநி கீர்த்தந ஸுகமா…
(இன்னும் வரும்)
