திருக்குறளும் உபநிஷத் வாக்கியங்களும்
Posted in உபநிஷத், தமிழ்ப்பதிவுகள், பக்தி on செப்டம்பர் 18, 2005 | மறுமொழி இல்லை »
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
மேற்கண்ட குறளுக்கு ஒற்றை வரியில் பொருள் சொல்ல வேண்டுமென்றால் சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்ற ஐந்தின் கூறுபாட்டையும் ஆராய்ந்தறியும் யோகிகளின் அறிவிற்கு உட்பட்டதே உலகம் என்பதாம். மொழிஞாயிறு ஞா.தேவநேய பாவாணர் அவர்களின் தமிழ் மரபுரையில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்:
ஐந்தின் கூறுபாடாவன, மேற்கூறிய பூதமூலம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய நிலம், நீர், தீ, வளி,வெளி என்னும் பூதங்கள் ஐந்தும், அவற்றொடு தொடர்புடைய புலனைக் கொண்ட மெய், வாய், கண்,மூக்கு, [...]
