ஜகத்குரு - 2
அக்டோபர் 2, 2005 ஆல் Srikanth
பரமதேசிகர் குருவிலாதவர்
பரவை வான்மதி தவழ்வேணிப்
பவளமேனியர் எனதுதாதையர்
பரமராசியர் அருள்பாலா
மருவி நாயெனை யடிமையாமென
மகிழ்மெய் ஞானமுமருள்வோனே…!
- அருணகிரிநாதரின் திருப்புகழ்
மேலான குருமூர்த்தியும், தனக்கொரு குரு இல்லாதவரும் கங்கையும் சந்திரனும் தரித்த
சடைமுடியினரும், பவளமேனியரும், எனது தந்தையாரும், பரம ரகசியமானவரும் ஆகிய சிவன் என்று அருணகிரி நாதர் தக்ஷிணாமூர்த்தியான சிவத்தை தொழுகிறார்.
चित्रं वटतरोर्मूले व्रुध्दा; शिष्या; गुरुर्युवा:
गुरोस्तु मौनम् व्याक्यानं सिष्यास्तु चिन्नसंशया:
சித்ரம் வடதரோர்மூலே வ்ருதா: சிஷ்யா: குருர்யுவா:
குரோஸ்து மெளனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்னசம்ஸயா:
- ஆதிசங்கரர்.
இது ஒரு சித்திரம். அழகிய ஆலமரத்தடியில் வயதான சீடர்கள் மத்தியில் குரு
அமர்ந்திருக்கிறார். சிஷ்யர்களோ வயதானவர்கள். ஆனால் குரு? யெளவன ஸ்வரூபி. அவர்களது பாடம் என்ன தெரியுமா? மெளனம் தான். மெளனமே வ்யாக்யானமாகி சிஷ்யர்களின் சந்தேகங்கள் தூள்துகள்களாகின்றன…
