மேலும் சில சுபாஷிதங்கள்…
நவம்பர் 16, 2005 ஆல் Srikanth
சுபாஷிதங்களின் வரிசையில் இன்னும் கொஞ்சம் பார்ப்போம். சிறியதாகவும், நேரடியான பொருள் பொதிந்ததாகவும் எளிமையாகவும் இருக்கும் ஸ்லோகங்கள் கற்றுக்கொள்பவர்களுக்கு மொழியையும் அதே நேரத்தில் நற்சிந்தனைகளையும் விதைக்கும் ஸ்லோகங்கள் என்ற வரிசையில் இன்னொரு ஸ்லோகம்…
न चोरहार्यं न च राजहार्यं न भ्रातृभाज्यं न च भारकारी।
व्ययेकृते वर्धतेव नित्यं विद्याधनं सर्वधनप्रधानम्॥
ந சோராஹ்ரயம் ந ச ராஜஹார்யம் ந ப்ராத்ருபாஜ்யம் ந ச பாரகாரி
வ்யயே க்ருதே வர்தத் ஏவ நித்யம் விதாதனம் சர்வதனப்ரதானம்
அதை திருட முடியாது. அரசனாலும் அபகரிக்க முடியாது. அண்ணன் தம்பிகளுக்குள்
பங்கிட்டுக் கொள்ள முடியாது. செலவு செய்வதனால் வளரும். மற்ற செல்வங்களின் காரணமாகவும் அது இருக்கிறது. வேறு எது - கல்விதான்.
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் என்ன? இன்னொரு ஸ்லோகம்…
आहारनिद्राभयमैथुनश्च सामान्यम् एतद्पशुभिर्नराणां ।
धर्मो हि तेषाम् अधिको विशेषः धर्मेणहीनः पशुभिः समानः॥
ஆஹாரா நித்ரா பயா மைதுனாஸ்ச சாமான்யாம் எதத்பசுபிநர்ண்யாம்
தர்மோ ஹி தேஷாம் அதிகோ விசேஷ: தர்மேண ஹீன: பசுபி: சமான:
உணவு, உறக்கம், பயம், குலம் விருத்தி செய்வது என்று மிருகங்களுக்கும்
மனிதர்களுக்கும் வேறுபாடே இல்லை. ஒன்றைதவிர. தர்மம் என்பது தான் அது.
(எது தர்மம்? - இதை மாணாக்கன் சிந்திக்கவேண்டும் என்பதுதானே நோக்கமே!)
இந்த தர்மம் இல்லாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வேறுபாடே இல்லை.
இன்னொரு சுபாஷிதம்:
मातृवत् परदारेषु परद्रव्येषुलोष्ठवत्।
आत्मवत् सर्वभूतेषु यः पश्यति सः पण्डितः॥
மாத்ருவத் பரதாரேஷு பரத்ரவ்ய லோஷ்டவத்
ஆத்மவத் சர்வபூதேஷு ய: பச்யதி ச பண்டிதா
பிறர் மனைவியை தாயாகவும் பிறர் உடமைகளை மண்ணுக்கு சமமாகவும்
எல்லா உயிர்களையும் தன்னைப்போல் மதிப்பவன் அறிவிற் சிறந்தவனாவான்.
சில ஸ்லோகங்கள் ரொம்ப சாதாரணமாக வாழ்வியல் உண்மைகளை எடுத்து சொல்லும்
लालयेत् पञ्चवर्षाणि दशवर्षाणि ताडयेत्।
प्राप्ते तु षोडशे वर्षे पुत्रं मित्रवदाचरेत्॥
லாலயதே பஞ்சவர்ஷாணி தசாசவர்ஷாணி தாடயத்
ப்ராப்தே து ஷோடசே வர்ஷே புத்ரம் மித்ரசதாசரத்
ஐந்து வயது வரை மிதமிஞ்சிய அன்பில் குழந்தையை வளர்க்கவேண்டும். அதற்கு பின்
பத்து வருடங்களுக்கு கண்டிப்புடன் நெறிப்படுத்த வேண்டும். பதினாறுக்கு மேல்
பெற்ற பிள்ளையானாலும் நண்பனாக நடத்தவேண்டும்….
अन्नदानं परं दानं विद्या दानम् अतः परम्।
अन्नेन क्षणिका तृप्तिः यावज्जीवञ्च विद्यया॥
அன்னதானம் பரம் தானம் வித்யாதானம் அத: பரம்:
அன்னேன க்ஷணிகா த்ருப்தி: யாவஜீவஞ்ச வித்யா:
அன்னதானம் சிறந்தது. அதைவிட கல்விதானம் இன்னும் சிறந்தது.
அன்னம் ஒரு நாளைக்கு திருப்தி அளிக்கும். கல்வி ஆயுள் முழுவதும்
திருப்தி அளிக்கும்.
अतिपरिचयादवज्ञा सन्ततगमनादनादरो भवति।
मलये भिल्लपुरन्ध्री चन्दनतरुकाष्ठमिन्धनं कुरुते॥
அதிபரிசயாதவஞ சந்ததகமநாதனாதரோ பவதி
மலயே பில்லுபுரந்த்ரி சந்தனதருகாஷ்டமிந்தனம் குருதே
பழக பழக பாலும் புளிக்கும் என்பார்களே அது போல்தான். அதி பரிச்சயம்
வெறுப்பையே வளர்க்கும். மலையில் வாழும் பெண் அடுப்பெறிக்க சந்தனத்தை
உபயோகிப்பாளாம் - அது போல.
