<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:media="http://search.yahoo.com/mrss"
	>

<channel>
	<title>Bhakthi Yogam</title>
	<atom:link href="http://bhakthi.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://bhakthi.wordpress.com</link>
	<description>ऑ भद्रं कर्णेभि: शृणुयाम देवा: भद्रं पश्येमाक्षभिर्यजत्रा:</description>
	<pubDate>Tue, 15 Jan 2008 13:08:14 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=MU</generator>
	<language>ta</language>
			<item>
		<title>திருப்பாவை உரை பதிவிறக்க&#8230;</title>
		<link>http://bhakthi.wordpress.com/2008/01/15/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://bhakthi.wordpress.com/2008/01/15/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Tue, 15 Jan 2008 13:04:54 +0000</pubDate>
		<dc:creator>Srikanth</dc:creator>
		
		<category><![CDATA[Tiruppavai]]></category>

		<category><![CDATA[தமிழ்ப்பதிவுகள்]]></category>

		<category><![CDATA[திருப்பாவை]]></category>

		<category><![CDATA[வைஷ்ணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://bhakthi.wordpress.com/2008/01/15/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/</guid>
		<description><![CDATA[திருப்பாவை உரை முழுவதும் பதிவிறக்கவும், படிக்கவும் இங்கே செல்லவும்.
இந்த உரை முழுவதும் எழுதுவதில் ஊக்கம் கொடுத்து உதவிய நண்பர்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள். ஆண்டாளும் ரங்கமன்னரும் அனுகிரஹிப்பார்களாக!
       ]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>திருப்பாவை உரை முழுவதும் பதிவிறக்கவும், படிக்கவும் <a href="http://www.slideshare.net/kichu/tiruppavai-commentary" target="_blank">இங்கே செல்லவும்.</a></p>
<p>இந்த உரை முழுவதும் எழுதுவதில் ஊக்கம் கொடுத்து உதவிய நண்பர்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள். ஆண்டாளும் ரங்கமன்னரும் அனுகிரஹிப்பார்களாக!</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/bhakthi.wordpress.com/82/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/bhakthi.wordpress.com/82/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/bhakthi.wordpress.com/82/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/bhakthi.wordpress.com/82/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/bhakthi.wordpress.com/82/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/bhakthi.wordpress.com/82/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/bhakthi.wordpress.com/82/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/bhakthi.wordpress.com/82/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/bhakthi.wordpress.com/82/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/bhakthi.wordpress.com/82/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/bhakthi.wordpress.com/82/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/bhakthi.wordpress.com/82/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=bhakthi.wordpress.com&blog=2280837&post=82&subd=bhakthi&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://bhakthi.wordpress.com/2008/01/15/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/srikkanthan-128.jpg" medium="image">
			<media:title type="html">Srikanth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருப்பாவை 30 - வங்கக் கடல்</title>
		<link>http://bhakthi.wordpress.com/2008/01/14/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-30-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://bhakthi.wordpress.com/2008/01/14/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-30-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 14 Jan 2008 10:09:27 +0000</pubDate>
		<dc:creator>Srikanth</dc:creator>
		
		<category><![CDATA[Tiruppavai]]></category>

		<category><![CDATA[தமிழ்ப்பதிவுகள்]]></category>

		<category><![CDATA[திருப்பாவை]]></category>

		<category><![CDATA[பக்தி]]></category>

		<category><![CDATA[வைஷ்ணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://bhakthi.wordpress.com/2008/01/14/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-30-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/</guid>
		<description><![CDATA[வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!
வங்க கடல் எனும் மரக்கலங்கள் மிதக்கும் பாற்கடலைக் கடைந்து மா என்கிற லக்ஷ்மியைப் பெற்ற மாதவனை, ஆஸ்ரிதர்களுக்கு ஊறு செய்த அசுரர்களை அழித்த கேசவனை, ஆய்ப்பாடியில் திங்கள் திருமுகத்து சேயிழையார்களான பெண்பிள்ளைகள், அவன் இருக்குமிடத்துக்கே சென்று இரைஞ்சி, அங்கே பறை கொண்டார்கள். பறை எனும் பரம [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><font color="#008000">வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்<br />
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி<br />
அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்<br />
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன<br />
சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே<br />
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்<br />
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்<br />
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!</font></p>
<p>வங்க கடல் எனும் மரக்கலங்கள் மிதக்கும் பாற்கடலைக் கடைந்து மா என்கிற லக்ஷ்மியைப் பெற்ற மாதவனை, ஆஸ்ரிதர்களுக்கு ஊறு செய்த அசுரர்களை அழித்த கேசவனை, ஆய்ப்பாடியில் திங்கள் திருமுகத்து சேயிழையார்களான பெண்பிள்ளைகள், அவன் இருக்குமிடத்துக்கே சென்று இரைஞ்சி, அங்கே பறை கொண்டார்கள். பறை எனும் பரம புருஷார்த்தத்தை அவனிடமிருந்தே பெற்றார்கள். இந்த ஆற்றை - பெருஞ்செயலை பிற்காலத்தில் ஆண்டாள் அனுகரித்து, பக்தியால் உணர்ந்து பாடினாள்.</p>
<p>அணி புதுவை - இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஸ்ரீவில்லி புத்தூரில், பைங்கமல தண் தெரியல் என்று தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை - தன் இரண்டு தோள்கள் நான்கு தோள்களாகும் படியாக, இரண்டு கை போதாது இந்த ஆஸ்ரிதரை அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பனாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம்  பெற்று இன்புறுவர் என்று மங்களா சாசனம் செய்கிறாள்.</p>
<p>&#8216;நற்கன்னுக்கிரங்குந்தேனு தோற்கன்னுக்குமிரங்குமாபோலே&#8230;&#8217; என்று வியாக்கியானத்தில் சொன்னபடி, நாம் ஆய்ப்பாடியை சேர்ந்தவர்கள் இல்லாவிட்டாலும், ஆழ்வார் ஆசார்யர்கள் ஆண்டாளைப்போல் இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், நல்ல கன்றைப்போலே, தோல் கன்றுக்குட்டிக்கும் பசு இரங்கி பால் சுரப்பது போல், பகவான் அருளுவன் என்று சொன்னார்கள்.</p>
<p>இந்த பாசுரத்துடன் திருப்பாவை நிறைவுக்கு வருகிறது. நம்மால் முடியுமா என்று சந்தேகமெல்லாம் பட்டுக்கொள்ளாமல், ஆசைப்பட்டு திருப்பாவைக்கு வியாக்கியானம் எழுத ஆரம்பித்தேன். இதில் சித்தாந்த விரோதமாகவோ, ஆசார்யர் உபதேச விரோதமாகவோ, பகவத் அபசாரமோ, பாகவத அபசாரமோ, இன்னும் அறியாத வகையில் எதாவது குறைகள் இந்த உரையில் நலிந்தும் வலிந்தும் ஏற்பட்டிருக்குமேயானால், பெரியோர்கள் க்ஷமிக்க வேண்டும் என்று உளமாற சேவித்து  கேட்டுக்கொள்கிறேன்.</p>
<p>இந்த மார்கழியில், திருப்பாவையை சொன்னவர்கள், கேட்டவர்கள், படித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதையின் அருள், அவள் உகந்த செல்வத்திருமால் கண்ணனது அருள் தட்டின்றி கிடைக்கட்டும். வாழ்வில் எல்லா மங்களங்களும் அடைந்து எங்கும் அடியார்கள் ஆசார்யர்கள் தொடர்பும், சத்வ குணமும், ஐஸ்வர்யங்களும், பகவத் கிருபையும் பெற்று இன்புற வேண்டும் என்று வாழ்த்தி இந்த திருப்பாவை உரையை முடிக்கிறேன்.</p>
<p>***</p>
<p align="center"><font color="#008000">திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!<br />
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!<br />
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!<br />
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!<br />
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!<br />
உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!<br />
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!<br />
வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!</font></p>
<p align="center"><font color="#008000">ஆண்டாள் திருவடிகளே சரணம்<br />
ஆசார்யர் திருவடிகளே சரணம்<br />
ஆழ்வார் திருவடிகளே சரணம்<br />
ஸ்ரீமதே நாராயணாய நம:<br />
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து: </font></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/bhakthi.wordpress.com/81/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/bhakthi.wordpress.com/81/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/bhakthi.wordpress.com/81/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/bhakthi.wordpress.com/81/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/bhakthi.wordpress.com/81/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/bhakthi.wordpress.com/81/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/bhakthi.wordpress.com/81/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/bhakthi.wordpress.com/81/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/bhakthi.wordpress.com/81/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/bhakthi.wordpress.com/81/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/bhakthi.wordpress.com/81/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/bhakthi.wordpress.com/81/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=bhakthi.wordpress.com&blog=2280837&post=81&subd=bhakthi&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://bhakthi.wordpress.com/2008/01/14/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-30-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/srikkanthan-128.jpg" medium="image">
			<media:title type="html">Srikanth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருப்பாவை 29 - சிற்றஞ் சிறுகாலே</title>
		<link>http://bhakthi.wordpress.com/2008/01/14/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-29-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%9e%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/</link>
		<comments>http://bhakthi.wordpress.com/2008/01/14/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-29-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%9e%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/#comments</comments>
		<pubDate>Mon, 14 Jan 2008 04:19:18 +0000</pubDate>
		<dc:creator>Srikanth</dc:creator>
		
		<category><![CDATA[தமிழ்ப்பதிவுகள்]]></category>

		<category><![CDATA[திருப்பாவை]]></category>

		<category><![CDATA[பக்தி]]></category>

		<category><![CDATA[வைஷ்ணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://bhakthi.wordpress.com/2008/01/14/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-29-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%9e%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/</guid>
		<description><![CDATA[சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!
இது திருப்பாவையின் முத்தாய்ப்பான பாசுரம். இதற்கு அடுத்த பாசுரம் சாற்றுமுறையாக, வாழ்த்துரையாக ஆண்டாள் பாடியது. இந்த பாசுரம் வரை தன்னை ஆய்ப்பாடியைச் சேர்ந்த  பெண்பிள்ளையாக எண்ணிக்கொண்டு ஆண்டாள் பாடினாள். அடுத்த பாசுரத்தில் பெரியாழ்வாரின் பெண்ணாக, திருப்பாவை பாசுரங்களை இயற்றிய கவியாக பலஸ்ருதி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><font color="#008000">சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்<br />
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்<br />
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ<br />
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.<br />
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!<br />
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு<br />
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்<br />
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!</font></p>
<p>இது திருப்பாவையின் முத்தாய்ப்பான பாசுரம். இதற்கு அடுத்த பாசுரம் சாற்றுமுறையாக, வாழ்த்துரையாக ஆண்டாள் பாடியது. இந்த பாசுரம் வரை தன்னை ஆய்ப்பாடியைச் சேர்ந்த  பெண்பிள்ளையாக எண்ணிக்கொண்டு ஆண்டாள் பாடினாள். அடுத்த பாசுரத்தில் பெரியாழ்வாரின் பெண்ணாக, திருப்பாவை பாசுரங்களை இயற்றிய கவியாக பலஸ்ருதி சொல்லி முடிக்கிறாள். இந்த பாசுரம் பகவத் தாஸ்யம் சொல்லுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான எல்லே இளங்கிளியே! பாசுரத்தில் பாகவத தாஸ்யம் சொல்லப்பட்டது. இந்த இரண்டு பாசுரங்களையுமே பூர்வாசார்யர்கள் ஆச்சர்யப்பட்டு திருப்பாவையாவது இப்பாட்டிறே! என்று புகழ்ந்தார்கள்.</p>
<p>ரொம்பவும் தத்துவமாகவும், கவித்துவமாகவும் சொல்லி வந்த ஆண்டாள், பகவானை நேரில் பார்த்த பரவசத்தை கடைசி ஐந்து பாசுரங்களில் வெளிப்படுத்துகிறாள். அதிலும் இந்த பாசுரம் முடிந்த முடிவாக  தான் விரும்பி வந்தது என்ன என்று உடைத்து சொல்லி அவனுடைய தாஸ்யத்தை தனது பரம புருஷார்த்தமாக கேட்டுக்கொண்ட பாசுரம். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே! என்று அபராத க்ஷமாபனம் செய்து தனது முன்வினைகளை சரணாகதியின் மூலம் அழித்தது இதற்கு முந்தைய பாசுரத்தில். அந்த பாசுரத்தில் முக்கியமான வார்த்தைகள் அவை.</p>
<p>அதே போல் இந்த பாசுரத்திலும் இற்றைப் பறைகொள்வான் அன்று! காண், கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாமாட்செய்வோம்! என்று நாங்கள் வெறும் பறை எனும் வாத்தியத்தை பெற்றுப்போக வரவில்லை. அது ஒரு வியாஜமே! நாங்கள் வந்தது உன்னிடம் அடிமையாக இருக்கும் பெரும் பேற்றை பரம புருஷார்த்தமாக பெற்றுப்போகவே! இதை பூர்வாசார்யர்கள், &#8216;ஸ்ரீ பரதாழ்வானைப் போலே விஸ்லேஷித்திருக்கையன்றிக்கே, இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேணும்&#8217; என்று தெரிவிக்கிறார்கள். பரதனைப்போலே உன்னை பிரிந்த போது, அன்னம் தண்ணீர் இல்லாது உன் பாதுகையையே நமஸ்கரித்து அதனடிவாரத்திலேயே இருந்து பக்தி பண்ணிக்கொண்டிருந்தபடி. உன்னோடு இருக்கும்போது, இளைய பெருமாளான லக்ஷ்மணனைப்போல் எல்லாவிதமான தாஸ்யங்களையும் குறைவற்று உனது திருப்திக்காகவே செய்தபடி இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.</p>
<p>எற்றைக்கும் என்பது எக்காலத்திலும் என்று ஸ்ரீவைகுண்டத்தில் அருகில் இருந்து செய்யும் தொண்டு. ஏழேழ் பிறவி என்றால், பகவான் பூமிக்கு வந்தாலும் அவனுடனே வந்து இருந்து அவன் கூடவே தொண்டு செய்தல். ஏழேழ் பிறவி என்பது எண்ணிக்கை என்று கொள்ளாமல் எத்தனை முறையானாலும் என்றே கொள்ள வேண்டும். வேறொரு விதமாகப் பார்த்தால், இனி ஒரு வேளை பிறப்பெடுக்க நேர்ந்தால், அப்போதும் உனக்கு தாஸனாகவே இருக்க வேண்டும் என்று கேட்பதாகும். மற்றை நம் காமங்களை மாற்றி உனக்கே ஆட்செய்ய அருளுவாய் என்று கர்ம வாஸனை எங்களை வேறு விஷயங்களில் இழுத்து அமிழ்த்தி விடாமல் அதிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும்  என்று ப்ரார்த்திக்கிறார்கள்.</p>
<p>இப்படி கேட்பதற்கு இந்த பாசுரத்தின் முன் பாதியில் ஒரு உறுதியை வெளிப்படுத்துகிறாள். சிற்றஞ் சிறுகாலே வந்து&#8230; என்று இளம் விடியற்காலையில் வந்து எனும்போது, அவனை தேடி அடி எடுத்து வைத்து வந்ததற்கே அவன் ரக்ஷிக்க சங்கல்பித்து விடுவனாம். பின் &#8216;உன்னை சேவித்து&#8217; என்று அவனை விழுந்து வணங்கிவிட்டால், அதற்கு என்ன தரக்கூடும் என்று திகைத்துப் போவானாம் பகவான். &#8216;அதுக்கு மேலே ஓரஞ்சலியையும் உண்டறுக்கமாட்டாத உன்னைச் சேவித்து&#8217; என்று பூர்வாசாரயர்கள் சொல்கிறார்கள். &#8216;உன் பொற்றாமரை அடியே&#8217; என்று ஏகாரமாக இழுத்து சொல்வதால் வேறொருவரையும் நாடாமல் உன் திருவடிகளையே நாடி வந்து சேவித்து உன்னை போற்றி ஸ்தோத்திரம் செய்து, கவன ஈர்ப்பாக &#8216;பொருள் கேளாய்!&#8217; என்று நாங்கள் வந்த காரியத்தை கேள் என்கிறாள்.</p>
<p>பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து என்று சொல்லும் போது, &#8216;ரக்ஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தாலல்லாது தாங்களுண்ணாத குலம்&#8217; என்று ஆயர் குலத்துக்கு உள்ள லக்ஷணத்தைப்போல் தம்மிடம் ரக்ஷணத்துக்கு வந்த ஜீவனை ரக்ஷிக்காமல் விடாத நீ, குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது! என்று உறுதியாய் சொல்கிறாள். நீ எங்களை கொள்ளாமல் விடுவது உன் ஸ்வரூபத்துக்கு விரோதமாகும். அதனால் நீ நிச்சயம் எங்களை ரக்ஷிப்பாய் என்று மஹா விஸ்வாசத்தை வெளிப்படுத்துகிறாள்.</p>
<p>நாங்கள் உன்னிடம் சூடகம், பாடகம் என்று என்னென்ன கேட்டாலும் கொடுத்தாய். நாங்கள் அதை மட்டுமே பெற்றுப்போக வரவில்லை. அவைகளெல்லாம் இப்போது நாங்கள் கேட்கப்போவதான மோக்ஷத்துக்கு (நீ உகக்கூடிய) சாதனங்கள். எங்களுக்கு உன்னிடம் ஸ்மரணை ஏற்படுத்துவதும், உன்னை வந்தடைவதற்கு ஏற்ற சாதனத்தைக் கொடுப்பதும், செப்பமுடைய உன் திறலால் எங்கள் சாதகத்திற்கு விரோதமாக இருப்பதை நீக்குவதும், மற்றை நம் காமங்கள் மாற்றுவதும், எங்களோடே அந்தர்யாமியாய் இருந்து தேற்றுவதும் உன் அருளாலே கிடைக்க வேண்டும். சாத்யோபாயங்களும், சித்தோபாயங்களும் எல்லாம் உன்னாலேயே கிடைக்க வேண்டும், நீயே சரணம் என்று சரணாகதி செய்கிறாள் ஆண்டாள்.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/bhakthi.wordpress.com/80/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/bhakthi.wordpress.com/80/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/bhakthi.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/bhakthi.wordpress.com/80/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/bhakthi.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/bhakthi.wordpress.com/80/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/bhakthi.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/bhakthi.wordpress.com/80/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/bhakthi.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/bhakthi.wordpress.com/80/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/bhakthi.wordpress.com/80/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/bhakthi.wordpress.com/80/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=bhakthi.wordpress.com&blog=2280837&post=80&subd=bhakthi&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://bhakthi.wordpress.com/2008/01/14/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-29-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%9e%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/srikkanthan-128.jpg" medium="image">
			<media:title type="html">Srikanth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருப்பாவை 28 - கறவைகள் பின்சென்று</title>
		<link>http://bhakthi.wordpress.com/2008/01/13/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-28-%e0%ae%95%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://bhakthi.wordpress.com/2008/01/13/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-28-%e0%ae%95%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 13 Jan 2008 15:18:38 +0000</pubDate>
		<dc:creator>Srikanth</dc:creator>
		
		<category><![CDATA[Tiruppavai]]></category>

		<category><![CDATA[தமிழ்ப்பதிவுகள்]]></category>

		<category><![CDATA[திருப்பாவை]]></category>

		<category><![CDATA[பக்தி]]></category>

		<category><![CDATA[வைஷ்ணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://bhakthi.wordpress.com/2008/01/13/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-28-%e0%ae%95%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/</guid>
		<description><![CDATA[கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச்
சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்!

கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறை கொள்ள வந்தோம் என்று சொன்ன ஆண்டாளிடம், க்ருஷ்ணன் லீலா விநோதனாக விளையாட்டுப் பேச்சு பேசுகிறான். அப்படி நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதையெல்லாம் அளிக்கிறேன், பதிலுக்கு நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க ஆண்டாள் தனது ஆகிஞ்சன்ய குணத்தை (கைமுதல் இல்லாமையை) வெளிப்படுத்தி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><font color="#008000">கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்<br />
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்<br />
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்<br />
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு<br />
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது<br />
அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச்<br />
சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே<br />
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்!<br />
</font><br />
கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறை கொள்ள வந்தோம் என்று சொன்ன ஆண்டாளிடம், க்ருஷ்ணன் லீலா விநோதனாக விளையாட்டுப் பேச்சு பேசுகிறான். அப்படி நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதையெல்லாம் அளிக்கிறேன், பதிலுக்கு நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க ஆண்டாள் தனது ஆகிஞ்சன்ய குணத்தை (கைமுதல் இல்லாமையை) வெளிப்படுத்தி தனது நிலையை விளக்குகிறாள். இந்த பாசுரம் மிக உயர்ந்த அர்த்த செறிவு கொண்டது. வைஷ்ணவத்தில் ரஹஸ்ய த்ரயங்களுள் ரத்னமாக விளங்கும் த்வய மந்திரத்தை இந்த பாசுரத்துடன் சாம்யப் படுத்தி பூர்வாசார்யர்கள், இந்த பாசுரமும், &#8216;சிற்றம் சிறு காலே&#8217; பாசுரமும் த்வய மந்திரத்தின் இரு பாகங்களை சொல்வதாக அருளியிருக்கிறார்கள்.</p>
<p>கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம் என்றால், எங்களிடம் பெரிதாக ஆசார்ய சம்பத்தோ, சத் சங்க ப்ராப்தியோ இல்லை. நாங்கள் கறவைகள், பசுக்கள் பின்னாலே சென்று மாடு மேய்ப்பவர்கள். காட்டில் போய் சேர்ந்து உட்கார்ந்து உண்போம். பிறகு மாலையில் வீட்டுக்கு பசுக்களை ஓட்டி வருவோம். இப்படியே பொழுது போக்கினோம். எங்களுக்கு புண்ணியம் எது பாபம் எது என்று எதுவும் அறியாத பிள்ளைகளோம் என்றாள். சரி நீங்கள் தான் இப்படி, உங்கள் பூர்வர்கள் நல்ல காரியங்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா என்று கண்ணன் கேட்க, அப்படி எங்கள் குலத்திலேயே வழக்கமில்லை. எங்கள் குலம் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம். இப்படியாக புண்ணியமோ, பாபமோ எதுவுமே இல்லை எங்களிடம்.</p>
<p>எங்களிடம் இருப்பதெல்லாம், யாதவ மணியாக நீ வந்து உதிக்கப் பெற்றோமே அந்த பேறு ஒன்றுதான் இருக்கிறது. உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம். இவர்கள் புறத்தில் பார்க்க ஞான பக்தி யோகங்களெல்லாம் இல்லாதவர்களானாலும் இவர்களுக்கு ஒரு பெரும் சிறப்பு இருக்கிறது. ஸர்வஜ்ஞனான பகவான் ஸஹஜனாக இவர்களுடன் வந்து பிறந்தானே! அந்தப் பேறொன்று போதாதா? அறிவொன்று மில்லாத ஆய்க்குலம் என்று இவர்கள் ஆகிஞ்சன்யத்தை  தெரிவித்தாலும், பகவானை உணர்ந்து கொண்டார்கள். அவனது செளலப்ய செளசீல்யாதி குணங்களை புரிந்து கொண்டார்கள். தெய்வத்தை தமக்குள் உணர்ந்தார்கள்.</p>
<p>கண்ணா, எங்களிடம் நீ குறை என்று பார்க்க ஆரம்பித்தாயானால் அது அளவிலடங்காமல் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி நீ எங்களை, எங்கள் தகுதியைப்பார்த்து நீ ஏற்றுக் கொள்ள நினைக்காதே! நீ எங்களோடு ஒருவனாக வந்து பிறந்த உனக்கேது குறை! குறைவொன்றுமில்லாத கோவிந்தா! எங்கள் அறியாமை பாதாளம் வரை ஆழமுள்ள பள்ளம் என்றால் அதையும் நிறைக்கக்கூடிய மலையளவு கருணை கொண்ட பர்வதமாகவன்றோ நீ இருக்கிறாய்! அதோடு நாங்கள் எதையாவது வைத்திருந்து அதை விட்டு விட்டு உன்னிடம் வந்தோம், நாங்கள் ஒரு தியாகத்தை செய்தோம், பதிலுக்கு நீ பரிசு கொடுத்தாய் என்று உன் கருணையிலே குறை காண்பதற்கு இடமில்லை. எல்லாமே உன்னுடையது. எங்களிடம் எதுவும் இல்லை. அதனால் உனக்கு அந்த குறையும் வரப்போவதில்லை. உன் கருணைக்கும் எங்கள் அறியாமைக்கும் நேராகிவிட்டது.</p>
<p>அதோடு உனக்கு வேறொரு நிர்பந்தமும் உண்டு - அது எங்களோடு உனக்கு உண்டான சம்பந்தம்! உன்றன்னோடு உறவேல்! நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது! - இனி அந்த உறவை அறுத்துக் கொள்ளவே முடியாது. எங்களை இந்த ஜகத்தில் வந்து பிறக்கப்பண்ணியவனே நீதானே! நீ காரணம்.. நாங்கள் காரியம். இது ஆத்ம சம்பந்தம்.  &#8216;நீ எங்கள் கையில் தந்த மூலப்ரமாணத்தில் முதலெழுத்தைப் பார்த்துக் கொள்ளாய்!&#8221; என்றார்கள் பூர்வாசார்யர்கள். என்னை ஆஸ்ரயித்தவனை நான் என்று கைவிடாமல் ரக்ஷிக்கிறேன் என்று சத்யம் செய்ததை நினைவு கொள் என்கிறார்கள்.</p>
<p>உன்னை எங்களுக்கு நடுவே பிறக்கப் பெற்ற புண்ணியம் தவிர வேறு எதுவும் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. ஆனால பாவங்கள்? இமைக்கிற பொழுதில் எண்ண முடியாத அளவுக்கு பாவத்தை சேர்த்துக் கொள்கிற ஜீவன் மனிதன். அப்படி ஏற்படுகிற பாபத்துக்கு அபராத க்ஷமாபனமாக சொல்கிறார்கள். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறி அருளாதே! கோவிந்தா என்று கூப்பிட்டது வரைக்கும் நிறைய பாவங்களை செய்திருக்கிறோம். மஹதோ மஹீயனான உன்னை - பெரியவற்றுக்கும் பெரியவனான உன்னை எளிமையாக கோவிந்தா என்று சிறு பேர் கொண்டு அழைத்திருக்கிறோம். அழைத்தனவும் எனும் போது, இம்மாதிரி பலவாறும் குறைவுள்ள மனிதர்களோடு சமப்படுத்தி சிறு பேர் சொல்லி அழைத்திருக்கிறோம். இது அறியாமையாலும், பால்ய வயதினாலும், அன்பினால் ஏற்படுகின்ற சுவாதீனத்தாலும் ஏற்பட்ட பிழைகள்,  இவற்றைக் கண்டு கோபம் கொள்ளாமல் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.</p>
<p>அடுத்து, எங்கள் குறைபார்க்காது, குறைகளை மன்னித்து, எங்களை ஏற்று இறைவா! நீ தாராய் பறை! என்றார்கள். இறைவா! என்ற பதத்தில் இவர்களது நைச்ய பாவம் வெளிப்படுகிறது. இதுவரை மாலே! மணிவண்ணா! கோவிந்தா! என்றெல்லாம் பல பெயர்கள் சொன்னவர்கள், இறைவா என்று அவன் இறைமையை சொல்கிறார்கள். நீ பெரியவன், நாங்கள் சிறியவர்கள். நீ காரியமாயிருக்க நாங்கள் காரணமாயிருப்பவர்கள். நாங்கள் சரீரமாயிருக்க நீ சரீரியாய் இருக்கிறாய். நீ இன்றி நாங்கள் இல்லை. உன் உடலில் நாங்கள் ஒரு சிறு பகுதியைப்போல. பாவங்களை தன் கை செய்தது, தன் கால் செய்தது என்று ஒருவன் சொல்லுவனோ! நீ உடமைக்காரன் - ஸ்வாமி! நாங்கள் உன் உடமை - சொத்து! &#8216;உடமையையிழக்கை உடையவனிழவன்றோ. அன்றி அந்த உடமைக்கிழவன்றே!&#8217; என்றபடி நீ எங்களை இழந்தால் அது உனக்குத்தான் இழப்பே தவிர உன் சொத்தான எங்களுக்கு இழப்பில்லை. ஆதலால், குற்றம் குறைகளை மன்னித்து, பொருட்படுத்தாது, நாங்கள் விரும்புவதை அளித்து எங்களை ஏற்றுக் கொள் என்று கேட்கிறார்கள்.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/bhakthi.wordpress.com/77/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/bhakthi.wordpress.com/77/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/bhakthi.wordpress.com/77/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/bhakthi.wordpress.com/77/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/bhakthi.wordpress.com/77/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/bhakthi.wordpress.com/77/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/bhakthi.wordpress.com/77/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/bhakthi.wordpress.com/77/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/bhakthi.wordpress.com/77/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/bhakthi.wordpress.com/77/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/bhakthi.wordpress.com/77/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/bhakthi.wordpress.com/77/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=bhakthi.wordpress.com&blog=2280837&post=77&subd=bhakthi&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://bhakthi.wordpress.com/2008/01/13/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-28-%e0%ae%95%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/srikkanthan-128.jpg" medium="image">
			<media:title type="html">Srikanth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருப்பாவை 27 - கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா!</title>
		<link>http://bhakthi.wordpress.com/2008/01/12/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-27-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/</link>
		<comments>http://bhakthi.wordpress.com/2008/01/12/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-27-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Sat, 12 Jan 2008 04:25:40 +0000</pubDate>
		<dc:creator>Srikanth</dc:creator>
		
		<category><![CDATA[Tiruppavai]]></category>

		<category><![CDATA[தமிழ்ப்பதிவுகள்]]></category>

		<category><![CDATA[திருப்பாவை]]></category>

		<category><![CDATA[பக்தி]]></category>

		<category><![CDATA[வைஷ்ணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://bhakthi.wordpress.com/2008/01/12/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-27-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/</guid>
		<description><![CDATA[கூடாரை வேல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
&#8216;பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியம் போல்வன.. ஆலினிலையாய் அருள்&#8217; என்று இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவானிடம் ஸ்வரூப ஸித்தியை ப்ரார்திக்க, அவனும் இவர்களுக்கு தன்னையே போன்றதான ஸ்வரூபத்தை, சாரூப்ய நிலையை அருளுகிறான். இவர்கள் அதைவிட உச்ச நிலையான சாயுஜ்ய நிலையை இந்த பாசுரத்தில் கேட்கிறார்கள். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><font color="#008000">கூடாரை வேல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்<br />
பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம்<br />
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்<br />
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே<br />
பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம்<br />
ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு<br />
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்<br />
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!</font></p>
<p>&#8216;பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியம் போல்வன.. ஆலினிலையாய் அருள்&#8217; என்று இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவானிடம் ஸ்வரூப ஸித்தியை ப்ரார்திக்க, அவனும் இவர்களுக்கு தன்னையே போன்றதான ஸ்வரூபத்தை, சாரூப்ய நிலையை அருளுகிறான். இவர்கள் அதைவிட உச்ச நிலையான சாயுஜ்ய நிலையை இந்த பாசுரத்தில் கேட்கிறார்கள். நோன்பின் கடைநிலையை நெருங்கிவிட்ட இவர்கள் அவனிடம் சென்று சேர்வதான கல்யாண நிலையை - ஜீவனும் பரமனும் இணையும் கல்யாணத்தை - எண்ணி மகிழ்ந்து தம்மை தயார் படுத்திக் கொள்கிறார்கள்.</p>
<p>நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று சொன்னவர்கள் மூட நெய் பெய்து முழங்கை வழிவார உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு கூடியிருந்து உண்போம் என்று நோன்பினால் உன்னை அடைகிறோம் - அதனால் நோன்பின் பூர்த்தியாக உன் ப்ராஸாதங்களை நீ அருளியவற்றை அனுபவிக்கிறோம் என்கிறார்கள்.</p>
<p>கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! ஆண்டாள் இந்த பாசுரத்தைச் சேர்த்து இனி வரும் இரண்டு பாசுரங்களிலுமாக கோவிந்த நாமத்தை மூன்று முறை அனுசந்திக்கிறாள். கூடாரை என்றால் - இவனை வணங்கமாட்டேன் என்று த்வேஷிக்கிற பேர்களை வெல்லுகிற கோவிந்தா என்கிறாள். அப்படியானால் த்வேஷிக்காத பேர்களிடம் தோற்பான் என்று அர்த்தமாகிறதே என்றார்கள் பூர்வாசார்யர்கள். சரி த்வேஷமும் இல்லை, அத்வேஷமும் இல்லை&#8230; அவனை வணங்கவும் இல்லை, இகழவும் இல்லை&#8230; இப்படி இருப்பவர்கள் கதி? ஆண்டாள் இந்த பாசுரத்தின் முதல் ஒற்றை வரியில் பற்றியுமே சொல்லி விடுகிறாள்.</p>
<p>கூடாரை என்றால் வெறுக்கிற பேர்வழிகள். வெறுப்பாலேயே சதா அவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள். ஹிரண்யாக்ஷன் - ஹிரண்யகசிபு, ராவணன் - கும்பகர்ணன், சிசுபாலன் - தந்த வக்ரன் என்று வெறுப்பின் மூல முடிச்சாக, ஆணி வேறாக - இதற்கு மேலாக வெறுக்க முடியாது என்ற அசுரேந்த்ரர்களாக, த்வேஷ திலகமாக இருப்பவர்களை தோற்கப்பண்ணுகிறானாம்! அவர்கள் கருத்தைப் பிழைப்பித்து வெல்கிறான்.</p>
<p>கூடாத பேர்களை வெல்லுவான் என்றால், அவனை விரும்பிக் கூடுகிற பேர்களிடம் தோற்றுப்போகிறான் என்றுதானே ஆகிறது. பாண்டவர்கள் சரணாகதி செய்தார்கள். அவர்களுக்காக அவன் இரங்கி வந்து தூதனாக தாஸனாக அவர்களுக்கும் கீழ்நிலையை உகந்து ஏற்றவனல்லவா!</p>
<p>சரி வெறுக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை அவர்களுக்கு? என்றால் அதற்குத்தான் கோவிந்தா என்ற பதத்தை ஆண்டாள் ப்ரயோகித்தாள். கோவிந்த: என்ற பதத்திற்கு இப்படி விளக்கம் சொல்கிறார்கள்: கோ என்றால் பசு. பசுதனம் லபதே விந்ததி இதி கோவிந்த: என்றார்கள். பசுக்கள் அவனை எங்களை ரக்ஷிக்க  வா.. எங்கள் பின்னால் வா என்று அழைக்கவில்லை. அப்படி வருவதால் நாங்கள் கேட்காமலே வந்தாயே என்று கொண்டாடப் போவதுமில்லை. இப்படி இருக்கிற பசுக்கள் பின்னாடியும் போனானே! அவைகள் கேட்காமலே ரக்ஷித்தானே என்று அந்த அர்த்ததில் அத்வேஷமாத்திரமே பற்றாசாகக் கொண்டு ரக்ஷிப்பவன் கோவிந்தன் - வெறுப்பில்லாமல் இருப்பதே போதும் என்று கொண்டிருப்பவன் கோவிந்தன் என்று கோவிந்தா என்ற பதத்தை ஆண்டாள் ப்ரயோகித்தாள்!</p>
<p>அடுத்து சொல்கிறாள், கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசு என்றாள். கோவிந்தா என்று ஒருமுறை சொன்னாலே நாடு புகழும் பரிசு கிடைக்குமாம். இவர்கள் இவனை பாடிப்  பறையை - கைங்கர்ய பலப்ராப்தியை சம்மானமாகப் பெற்றதோடு அல்லாமல் அதற்கு மேலாக நாடு புகழும் பரிசு வேண்டும் என்று கேட்கிறார்கள். நாங்கள் பாடியதோடு அல்லாமல் நாடே எங்களை பாடுமாறு ஒரு பரிசு வேண்டும் என்கிறார்கள். சரி அப்படி என்ன வேண்டும் என்று அவன் யோசிக்க ஒரு பெரிய பட்டியலையே கொடுக்கிறார்கள்.</p>
<p>சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே என்றனைய பல்கலனும் - கேசாதி பாதமாக எல்லா அங்கங்களிலும் அணியும் பல்கலனும் நீ தரவேண்டும். சூடகம் என்னும் கைவளை, தோள்வளை, தோடு, செவிப்பூ என்னும் செவிக்கு மேலே அணிகிற நகை, பாடகம் என்றால் பாதத்தில் அணிகிற கழற்காப்பு என்று இவற்றை தரவேண்டும் என்கிறார்கள். இவர்கள் பரமனை நெருங்கவும், அவனும் இவர்களும் வியாமோஹத்தால் ஒருவரை ஒருவர் அணைக்க, முதலில் ஸ்பர்சிக்கும் அணி கைவளை. அடுத்து அவன் இவர்களை நெஞ்சார, அவனை விட்டு பிரிந்ததால் நலிந்த தோள்களை அணைக்க அங்கே தோள்வளை என்ற நகையை அணிகிறார்கள். தோடு என்ற காதில் அணியும் ஆபரணத்தை அவன் தானே வந்து அணிவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவனாம். செவிப்பூ என்ற காதணி, அவன் நாசியினால் முகர்ந்து பார்த்து உகப்பனாம். இப்படி இவர்களை ஆலிங்கனம் பண்ணி, விரஹத்தால் இவர்கள் காலை பிடிக்க அங்கே பாடகம் அணிந்தார்கள். இப்படி எல்லா வகையிலும் இதை அவன் ரசிப்பானே&#8230; இதை அவன் உகப்பானே என்று எண்ணி எண்ணி அணிகிறார்கள்.</p>
<p>இதற்கு உட்பொருளாக, சூடகம் என்கிற கைவளை இவர்களது பக்திக்கு காப்பு - ரக்ஷை. தோள்வளை என்பது சமாஸ்ரயணம் - தோளில் பதித்த சங்க சக்ர முத்திரைகள் - பாகவதனுக்குரிய திரு இலச்சினைகள்.  தோடு என்பது திருவஷ்டாக்ஷர மந்திரம். செவிப்பூ என்பது த்வய மந்திரம். பாடகம் என்பது சரம ஸ்லோகத்தைக் குறிக்கும்.</p>
<p>கோவில்களில் அர்ச்சா மூர்த்தியாக பெருமானை சேவிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. முதலில் அவன் திருமுகத்தைப்பார்த்து ஓம் நமோ நாராயணாய: என்கிற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை த்யானிக்க வேண்டும். பிறகு திரு உறையும் மார்பைப் பார்த்து ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரப்த்யே! ஸ்ரீமதே நாராயணாய நம: என்கிற த்வய மந்திரத்தை அனுசந்திக்க வேண்டும். பிறகு திருப்பாதங்களை தரிசித்து &#8216;ஸர்வ தர்மான் பரித்யஜ்ய: மாமேகம் சரணம் வ்ரஜ: அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசு ச:&#8217; என்று அவன் நென்னலே வாய்நேர்ந்த சரம ஸ்லோகத்தை ஸ்மரிக்க வேண்டும். இப்படி எல்லாவற்றையும் செய்து, ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஆபரணங்களாகக் கொண்டு இவற்றை அணிந்து எங்களுடைய ஸ்வாபாவிகமான ஜ்ஞான, பக்தி, வைராக்ய லக்ஷணங்களுடன் உன்னிடம் வருவோம் என்கிறாள் ஆண்டாள்.</p>
<p>ஆடையுடுப்போம் என்று சொல்லும்போது, இவர்கள் இதற்கு முன் ஆடை உடுத்தாமல் இல்லையே என்றால், இப்போது இவர்களுக்கு உயர்ந்த நிலை வந்துவிட அதைக் கொண்டாட, உடுத்து களைந்த நின் பீதகவாடை என்று பெரியாழ்வார் பாடியதுபோல், அவனுடைய ஆடையையும் இவர்கள் எடுத்து அணிகிறார்கள். மேலே சொன்ன அலங்காரங்களுக்கெல்லாம் அடிப்படையாக அவன் இவர்களுக்கு கொடுத்த சேஷத்வ ஞானத்தை ஆடையாக அணிவோம் என்பது உட்பொருள்.</p>
<p>அதன்பின்னே பால்சோறு, மூட நெய்பெய்து முழங்கை வழிவார என்று வ்ரத பூர்த்தியாக, பால் சோறும், முழங்கை வரை வழியும் அளவுக்கு நெய்யுமாக அவனுக்கு சமர்பித்து தாங்களும் அனுபவித்து கூடியிருந்து குளிர்வோம் என்கிறாள். பாலில் சோறு கலந்தார்போல், பாலில் நெய் கலந்தார்போல் என்று ஒன்றோடு ஒன்று கலந்து புதிய நறுசுவையுடன் உண்போம். அவனில் நாமும், நம்மில் அவனுமாக கலந்து கரைந்து, அஹமன்ன என்று நாம் அவனுக்கு உணவாகவும், அஹமன்னாத: என்று நமக்கு அவன் உணவாகவும் உண்டு களித்து - உன்னுடன் நாங்கள் சாயுஜ்ய பதவி அடைந்து நீயும் நாமுமாக கலந்து என்றென்றும் புதியதாக நித்யமாக கூடியிருந்து இன்பத்தை பெறுவோம் என்று ஆண்டாள் முடிக்கிறாள் .</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/bhakthi.wordpress.com/76/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/bhakthi.wordpress.com/76/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/bhakthi.wordpress.com/76/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/bhakthi.wordpress.com/76/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/bhakthi.wordpress.com/76/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/bhakthi.wordpress.com/76/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/bhakthi.wordpress.com/76/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/bhakthi.wordpress.com/76/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/bhakthi.wordpress.com/76/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/bhakthi.wordpress.com/76/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/bhakthi.wordpress.com/76/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/bhakthi.wordpress.com/76/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=bhakthi.wordpress.com&blog=2280837&post=76&subd=bhakthi&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://bhakthi.wordpress.com/2008/01/12/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-27-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/srikkanthan-128.jpg" medium="image">
			<media:title type="html">Srikanth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருப்பாவை 26 - மாலே! மணிவண்ணா!</title>
		<link>http://bhakthi.wordpress.com/2008/01/11/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-26-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/</link>
		<comments>http://bhakthi.wordpress.com/2008/01/11/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-26-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/#comments</comments>
		<pubDate>Fri, 11 Jan 2008 05:06:59 +0000</pubDate>
		<dc:creator>Srikanth</dc:creator>
		
		<category><![CDATA[Tiruppavai]]></category>

		<category><![CDATA[தமிழ்ப்பதிவுகள்]]></category>

		<category><![CDATA[பக்தி]]></category>

		<category><![CDATA[வைஷ்ணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://bhakthi.wordpress.com/2008/01/11/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-26-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/</guid>
		<description><![CDATA[மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!
பூவைப் பூவண்ணா! நீ சீரிய சிங்காதனத்திருந்து  யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்! என்று இவர்கள் கேட்டதற்கேற்ப அவனும் தன் நடையழகைக் காட்டி நடந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்து, &#8216;பெண்களே! நீங்கள் வந்த காரியம் என்ன?&#8217; என்று வினவுகிறான். இந்தப் பாட்டில் நோன்புக்கு தேவையான [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><font color="#008000">மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்<br />
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்<br />
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன<br />
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே<br />
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே<br />
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே<br />
கோல விளக்கே கொடியே விதானமே<br />
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!</font></p>
<p>பூவைப் பூவண்ணா! நீ சீரிய சிங்காதனத்திருந்து  யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்! என்று இவர்கள் கேட்டதற்கேற்ப அவனும் தன் நடையழகைக் காட்டி நடந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்து, &#8216;பெண்களே! நீங்கள் வந்த காரியம் என்ன?&#8217; என்று வினவுகிறான். இந்தப் பாட்டில் நோன்புக்கு தேவையான உபகரணங்களையெல்லாம் அவனிடம் யாசிக்கிறார்கள். அதுவும் மாயனே! நாராயணா! உலகளந்தவனே என்றெல்லாம் கேட்டால் அவன் மேன்மைதான் வெளிப்படுகிறது. அவன் பெரியவன் என்ற எண்ணம் ஏற்பட்டு அஞ்சி வாயில் வார்த்தைகளே வருவதில்லை.</p>
<p>அதனால் மாலே! என்றாள். தன் அத்தனை வியாமோஹத்தையும் - பித்து பிடித்த அன்பத்தனையும் கலந்து மாலே! என்றாள் இந்த ஒற்றைச் சொல்லில் அவன் செளலப்யம் - சுலபத்தன்மை, தோளோடு தோள் நின்று விளையாடிய கண்ணனை உருவகிக்கிறாள். இவர்களுக்கு மட்டுமா பித்து? அவனும் தான் மயங்கிக் கிடக்கிறான். கண்ணன், வந்திருக்கிற இவர்களது மார்பகங்களையும், இடையையும், முக அழகையும் பார்த்துக்கொண்டே மயங்கி நின்று விட்டானாம். அதாவது இவர்களது பக்தியையும், வைராக்கியத்தையும் , ஞானத்தையும் கண்டு அவனே ஒரு கணம் மயங்கி நின்று விட, நாங்கள் வேண்டுவன கேட்டியேல் என்று அவனை உலுக்கி எழுப்புகிறார்கள். எங்களுக்கு எத்தனை உன்னிடம் அன்பிருக்கிறதோ அதை விட பலமடங்கு அன்பை நீ எங்களிடம் வைத்திருக்கிறாய் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம் என்றாள்.</p>
<p>நாங்கள் வேண்டுவன கேட்டியேல், இந்த உலகமனைத்திலும் சிஷ்டர்களுக்கு ஆறுதலையும், துஷ்டர்களுக்கு பயத்தையும் உண்டு பண்ணக்கூடியதான உன் பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள் வேண்டும். பெரிதான பேரிகைகள் வாத்தியங்கள் வேண்டும். பல்லாண்டு இசைக்கக் கூடிய முக்தர்கள் எங்களுக்கு ஆசார்யர்களாக வர வேண்டும். விடியற்காலை ஆதலால் இருள் விலக்க அழகான விளக்குகள் வேண்டும். இன்னும் நோன்புக்கு வந்து கொண்டிருக்கிற பேர்களுக்கு தொலைவிலேயே இடத்தை அடையாளம் சொல்லத்தக்க கொடிகள் வேண்டும். இவற்றையெல்லாம் குடையாகக் காக்க கூடிய மேல்விதானம் வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலையே  அபெக்ஷிக்கிறார்கள்.</p>
<p>கண்ணன் கேட்டானாம், இதெல்லாம் வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? இதெல்லாம் மேலையார் செய்வனகள்! எங்களுடைய பூர்வாசார்யர்கள் செய்தபடி எங்களுக்கு தெரியும் என்றார்கள்.<br />
வியாக்கியானத்தில் இந்த இடத்தை அழகாக விளக்கியிருக்கிறார்கள். இவர்கள் கேட்டபடி தன்னுடைய சின்னங்களையெல்லாம் பெருமான் கொடுக்க ஆரம்பித்தானாம்.</p>
<p>என்னிடம் பாஞ்சசன்னியம் ஒன்றுதான் இருக்கிறது, அதன் ப்ரபாவங்களுக்கு ஈடாக இன்னொன்றில்லை, அதை எடுத்துக்கொள்ளுங்கள். நான் உங்களுடன் கூத்தாடின பறை இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். பல்லாண்டு பாடின விஷ்ணு சித்தரே இருக்கிறார். அந்த பெரிய ஆழ்வாரை ஆசார்யானாக வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு நப்பின்னையே கோல விளக்காக உங்களை காட்டித் தருகிறாள். அவளை எடுத்துக் கொள்ளுங்கள். என் கருடன் ஆரோகணித்த கொடி இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். விதானத்துக்கு என் அத்தவாளத்தையே (உத்தரீயத்தை) எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே பூர்வாசார்யர் சொல்கிறார், அவனுடைய விதானம் ஆதிசேஷன் அல்லவா? அதை ஏன் தரவில்லை என்றால், ஆதிசேஷன் பெருமாளே சொன்னாலும் &#8216;தன்னையொழிய ஓரடியிடமாட்டாதவனாகையாலே!&#8217; என்று அவனை விட்டு விலகம¡ட்டானாம். அதனால் தன் உத்தரீயத்தையே தருகிறேன் என்றானாம்.</p>
<p>மணிவண்ணா! நீ தருவதாகச் சொல்வதெல்லாம் ஒன்று தானே இருக்கிறது. எங்களுக்கு இதுமாதிரி பலப்பல வேண்டும் என்று இவர்கள் கேட்க, அவன் இல்லாததை எப்படி தருவது என்று திகைக்க, இவர்கள் சொல்கிறார்கள். உன்னிடம் இல்லாதது என்று ஒன்று உண்டா? ஆலினிலையாய்!  ஞாலமேழும் உனக்குள் கொண்டு ஆல இலையில் சிறு குழந்தையாக துயில் கொண்டவனாயிற்றே நீ! இருப்பது இல்லாதது எல்லாவற்றையும் கடந்து &#8216;இல்லாததையும்&#8217;, &#8216;இருப்பதையும்&#8217; உண்டு பண்ணுபவனாயிற்றே நீ, உன் அருளாலே எல்லாம் முடியும் என்று சொல்கிறார்கள்.</p>
<p>இங்கே நோன்பு நோற்பது என்பது பகவானுக்காக பக்தர்கள் செய்யும் கைங்கர்யமே ஆகும். இத்தை பூர்வாசார்யர்கள் சொன்னபடி செய்வது சிஷ்டாசாரம். சங்கங்கள் அவன் ஜெயத்தை சொல்லி இவர்களது அனன்யார்ஹ சேஷத்வத்தை குறிக்கும். பறை பரதந்த்ரீயத்தை குறிக்கும். பல்லாண்டிசைப்போர் சத்சங்கத்தை குறிக்கும். கோல விளக்கு பாகவத சேஷத்வத்தைக் குறிக்கும். விதானம், தன்னாலே தனக்காக எதுவும் இல்லை என்று போக்த்ருத்வ ஞானத்தைக் குறிக்கும். ஈஸ்வரனிடமிருந்து இந்த<br />
ஐஸ்வர்யங்களை எல்லாம் அருள் என்று யாசிக்கிறார்கள்.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/bhakthi.wordpress.com/75/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/bhakthi.wordpress.com/75/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/bhakthi.wordpress.com/75/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/bhakthi.wordpress.com/75/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/bhakthi.wordpress.com/75/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/bhakthi.wordpress.com/75/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/bhakthi.wordpress.com/75/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/bhakthi.wordpress.com/75/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/bhakthi.wordpress.com/75/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/bhakthi.wordpress.com/75/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/bhakthi.wordpress.com/75/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/bhakthi.wordpress.com/75/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=bhakthi.wordpress.com&blog=2280837&post=75&subd=bhakthi&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://bhakthi.wordpress.com/2008/01/11/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-26-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/srikkanthan-128.jpg" medium="image">
			<media:title type="html">Srikanth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருப்பாவை 25 - ஒருத்தி மகனாய்</title>
		<link>http://bhakthi.wordpress.com/2008/01/10/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-25-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be/</link>
		<comments>http://bhakthi.wordpress.com/2008/01/10/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-25-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Thu, 10 Jan 2008 02:31:04 +0000</pubDate>
		<dc:creator>Srikanth</dc:creator>
		
		<category><![CDATA[Tiruppavai]]></category>

		<category><![CDATA[தமிழ்ப்பதிவுகள்]]></category>

		<category><![CDATA[திருப்பாவை]]></category>

		<category><![CDATA[பக்தி]]></category>

		<category><![CDATA[வைஷ்ணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://bhakthi.wordpress.com/2008/01/10/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-25-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be/</guid>
		<description><![CDATA[ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
கண்ணன் ஒரு அதிசய பிறவி! ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலமேழும் உண்ட மாயன் அவன்! அவன் பிறப்பிலேயே எத்தனை மாயங்கள்! ஆண்டாள் சென்ற &#8216;அன்றிவ் வுலகம் அளந்தாய்!&#8221; பாசுரத்தில் அவன் செய்த அசாத்யமான காரியங்களை போற்றினாள். இந்த பாசுரத்தில், அன்றும் இன்றும் என்றும் வேறெங்கும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><font color="#008000">ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்<br />
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்<br />
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த<br />
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்<br />
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை<br />
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்<br />
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி<br />
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!</font></p>
<p>கண்ணன் ஒரு அதிசய பிறவி! ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலமேழும் உண்ட மாயன் அவன்! அவன் பிறப்பிலேயே எத்தனை மாயங்கள்! ஆண்டாள் சென்ற &#8216;அன்றிவ் வுலகம் அளந்தாய்!&#8221; பாசுரத்தில் அவன் செய்த அசாத்யமான காரியங்களை போற்றினாள். இந்த பாசுரத்தில், அன்றும் இன்றும் என்றும் வேறெங்கும் நடக்க முடியாததான பகவத் சேஷ்டிதத்தை பாடுகிறாள். .</p>
<p>வேறெந்த தெய்வமாவது இப்படி கொஞ்சமும் அஸூயைப்படாமல், கர்ப்ப வாசம் செய்திருக்கிறார்களா? அதுவும் பன்னிரு திங்கள் கர்ப்ப வாசம் செய்து கண்ணன் பிறந்தான். இப்படி ஒரு தெய்வம் செய்யலாமா என்றால், கர்ம வசத்தாலே ஜீவர்களான நமக்கு கர்ப்ப வாசம் நேருகிறது. க்ருபா வசத்தாலே அவனுக்கு  கர்ப்ப வாசம் நேர்ந்தது. &#8216;நம்முடைய கர்மம் நம்மோடே அவனை ஸஜாதீயனாக்கும்! அவனுடைய க்ருபை நம்மை அவனோடே ஸஜாதீயனாக்கும்!&#8221; அதாவது கர்ம வசத்தால் நாம் எடுக்கிற பிறவி அவனை நம்மிடமிருந்து விலக்குகைக்கு காரணமாயிருக்கும். அவன் க்ருபா வசத்தால் எடுக்கிற பிறவி நம்மை அவனிடம் சேர்க்கைக்கு காரணமாயிருக்கும்.</p>
<p>ஒருத்தி மகனாய் பிறந்து - தசரதன் தவம், யாகங்களியற்றி நான்கு புதல்வர்களை பெற்றான். இங்கே தேவகி, வசுதேவர், யசோதை, நந்தகோபர் என்று நால்வர் இயற்றிய தவத்துக்கு ஈடு இணையற்ற ஒரே யாதவ ரத்னமாக கண்ணன் பிறந்தான். வளர்ந்து பெரியவனாகிய பின் தான் ஸ்ரீராமன் பித்ருவாக்ய பரிபாலனம் செய்தான். இங்கே க்ருஷ்ணனோ பிறந்த சில மணிக்குள்ளே, தன் சங்க சக்ராதி அம்ஸங்களை மறைத்துக்கொள்ள தேவகி ப்ரார்த்திக்க உடனே அப்படி தன் அம்சங்களை மறைத்துக்கொண்டு அவள் இட்ட வழக்கை செய்து காட்டினான். என்னே அவள் பெருமை!</p>
<p>ஓரிரவில் ஒருத்தி மகனாய் - அந்தகாரமான, பயங்கரமான அந்த ராத்திரி நினைவுக்கு வருகிறது. சிறைச்சாலையில் பிறந்து, பிறந்த சில மணித்துளிக்குள்ளாகவே, கொடும் இரவில், கொட்டும் மழையில், பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து வேறொருத்திக்கு மகனாய் போய் சேர்ந்தானே! என்ன ஆச்சர்யமான சம்பவங்கள்! பூர்வாசார்யர்கள் இதை வேறு விதமாகவும் அனுபவிக்கிறார்கள்.</p>
<p>&#8216;நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப்போலெ, கம்ஸாதிகள் தண்மை ஸூதிகாக்ருஹத்திலே ஓரிரா தங்கவொட்டிற்றில்லை என்கை&#8217; என்றார்கள். கம்ஸன் முதலான அரக்கர்களின் சமீபம், தெய்வீகமான இந்த குழந்தையை, ப்ரசவிக்கிற அறையில் ஒரு ராத்திரி கூட தங்க விடவில்லை. உடனே குழந்தையை இடம் மாற்றியாக வேண்டியதாகி விட்டது.</p>
<p>அதோடு, முதலில் சொன்ன ஒருத்தி தேவகி. இப்போது சொல்கிற ஒருத்தி யசோதை. யசோதைக்கு ஈடு இணை உண்டோ! ஈடு இணையற்ற அத்விதீயமானவள் அவள். தேவகி கண்ணனை பிறந்த குழந்தையாக பார்த்தாள். யசோதையோ அவன் வளர்ந்து, அவன் பால லீலைகளையெல்லாம், தொல்லையின்பத்தையெல்லாம் திகட்ட திகட்ட அனுபவித்தவள். அவள் பெருமைக்கு ஈடே இருக்க முடியாது.</p>
<p>தீயவனான கம்சனின் விஷப்பார்வை கண்ணன் மீது பட்டு விடக்கூடாதே, நல்லவர்களான தேவர்களும் இவன் இருக்குமிடம் தெரிந்தால் அவர்களெல்லாம் இவனிடம் ப்ரமை கொண்டு கூடி வருவர், அதனால் இவனிருப்பது வெளித்தெரிந்து விடுமே என்று யாரும் பார்க்காமல் கண்ணனை நிலவரையில் வைத்து வளர்த்தாளாம் யசோதை. எப்படி நம் மத்தியிலேயே, சேதன அசேதனர்களுக்குள்ளேயே அந்தர்யாமியாய் அவன் இருந்தாலும் மறைந்து இருக்கிறானோ, அதைப்போல் ஆஸ்ரிதர்கள் மத்தியில் பிறந்து வளர்ந்தாலும் அவன் மறைந்தே இருந்தானாம். இது அவனுடைய சங்கல்பம் - அதைத்தவிர வேறு விளக்கங்கள் இல்லை. ஓரிடத்தில் பிறப்பதும், தாயை தவிக்க விட்டு, வேறொரிடத்துக்கு போவதும், உலக கண்களிலிருந்து மறைந்திருப்பதும், பின் வெளிவந்து யுத்தம் செய்வதும் எல்லாம் அவன் சித்தம் - சங்கல்பம்.</p>
<p>இப்படி கண்ணனை நினைக்கும் போதே கம்ஸனையும் நினைக்க வேண்டியிருக்கிறதே! அது அவன் செய்த புண்ணியம்! ஆண்டாள் கம்சனை எண்ணி, &#8216;தரிக்கிலனாகித் தான் தீங்கு நினைந்த&#8217; என்று கண்ணன் ஆய்ப்பாடியில் இருக்கிறான் என்று தெரிந்தவுடன் ஓரிடத்தில் தன் உடலை தரிக்க முடியவில்லையாம் கம்சனுக்கு. உடலும் தவிக்க, உள்ளமும் தவிக்க தரிக்க முடியாமல் துடித்தானாம்.</p>
<p>அவனுக்கு தங்கையாய் பிறந்த பாவத்துக்கு, தேவகியின் வயிற்றில் பயாக்னியை வைத்தான். கண்ணன் பிறந்து அந்த அக்னியை கம்ஸன் வயிற்றுக்கு மாற்றி விட்டான். என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் தனக்கு தானே தீங்கு செய்து கொண்டான். அவன் கண்ணனை அழிக்க வேண்டும் என்கிற கருத்தை பிழையாக்கி, (எண்ணத்தில் மண் விழ வைத்து), தானே எல்லாம் என்று நினைத்து நிர்பயமாக இருந்த அரக்கன் வயிற்றில் பயாக்னியை உண்டு பண்ணி நெருப்பென்ன நின்றான் கண்ணன். சின்ன குழந்தையாய் இருந்தாலும் கம்ஸனுக்கு நெருப்பென்ன நெடுமாலாய் நின்றானாம் கண்ணன்.</p>
<p>நெடுமாலே! &#8216;பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே பிச்சின்மேலே பிச்சேற்ற வந்தோம்!&#8221; என்று அவன் மீது இவர்களுக்கும், இவர்கள் மீது அவனுக்கு வியாமோகம் அதிகம். அதனால் உன்னை உன்னிடமிருந்து உன்னையே அருத்தித்து பெற வந்தோம்.  இப்போது ஆண்டாள் அவன் சங்கல்ப விசேஷத்தை நினைத்து பார்த்து, &#8216;பறை தருதியாகில்&#8217; என்று எங்களுக்கு பறையை - கைங்கர்ய ப்ராப்தியை தருவதென்று சங்கல்பித்தாயானால், உன் சங்கல்பம் இருந்து நீ கொடுத்தால், வருத்தம் தீர்ந்து மகிழ்வோம் என்கிறாள்.</p>
<p>உன் சங்கல்பம் இருந்தால், நீ எங்களுக்கு கைங்கர்ய ஸ்ரீயை கொடுத்தால், நாங்கள் உன்னையும் உன் பிராட்டியான மஹாலக்ஷ்மியையும் திருத்தக்க செல்வமாக, என்றும் நிலையான செல்வமாக பெற்று, உங்களுக்கு சேவகம் செய்து, இதுகாறும் பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, நித்யமான பரமானந்த நிலையை அடைந்து மகிழ்வோம் என்று சொல்கிறாள்.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/bhakthi.wordpress.com/74/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/bhakthi.wordpress.com/74/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/bhakthi.wordpress.com/74/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/bhakthi.wordpress.com/74/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/bhakthi.wordpress.com/74/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/bhakthi.wordpress.com/74/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/bhakthi.wordpress.com/74/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/bhakthi.wordpress.com/74/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/bhakthi.wordpress.com/74/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/bhakthi.wordpress.com/74/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/bhakthi.wordpress.com/74/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/bhakthi.wordpress.com/74/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=bhakthi.wordpress.com&blog=2280837&post=74&subd=bhakthi&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://bhakthi.wordpress.com/2008/01/10/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-25-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/srikkanthan-128.jpg" medium="image">
			<media:title type="html">Srikanth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருப்பாவை 24 - அன்றிவ் வுலகம் அளந்தாய்!</title>
		<link>http://bhakthi.wordpress.com/2008/01/09/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-24-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%95/</link>
		<comments>http://bhakthi.wordpress.com/2008/01/09/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-24-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Wed, 09 Jan 2008 04:17:29 +0000</pubDate>
		<dc:creator>Srikanth</dc:creator>
		
		<category><![CDATA[Tiruppavai]]></category>

		<category><![CDATA[தமிழ்ப்பதிவுகள்]]></category>

		<category><![CDATA[திருப்பாவை]]></category>

		<category><![CDATA[பக்தி]]></category>

		<category><![CDATA[வைஷ்ணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://bhakthi.wordpress.com/2008/01/09/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-24-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%95/</guid>
		<description><![CDATA[அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி !
கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி !
குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி !
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !
என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்றுயாம்  வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!

அன்றும் இன்றும் என்றென்றும் என்று முக்காலத்தையும் ஒரு பாசுரத்தில் ஆண்டாள் அடக்கி விட்டாள். இதற்கு முந்தைய பாசுரத்தில் சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து யாம் வந்த காரியத்தை ஆராயவேண்டும் என்று கேட்ட ஆண்டாள், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><font color="#008000">அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !<br />
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !<br />
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி !<br />
கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி !<br />
குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி !<br />
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !<br />
என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்<br />
இன்றுயாம்  வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!<br />
</font><br />
அன்றும் இன்றும் என்றென்றும் என்று முக்காலத்தையும் ஒரு பாசுரத்தில் ஆண்டாள் அடக்கி விட்டாள். இதற்கு முந்தைய பாசுரத்தில் சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து யாம் வந்த காரியத்தை ஆராயவேண்டும் என்று கேட்ட ஆண்டாள், அதன் படியே பகவான் படுக்கையறையினின்று எழுந்து வந்து சபா மண்டபத்துக்கு நடக்கவும், அவன் நடையழகை ரசித்து அனுபவிக்கிறாள். பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாயிற்றே இவள்! அதனால் அவரது பல்லாண்டு பாசுரத்தையும் விஞ்சி நிற்கும் தன்மையாய் இங்கே பகவானுக்கு மங்களாசாசனம் செய்கிறாள்!</p>
<p>அதென்னவோ ஆண்டாளுக்கு இந்த த்ரிவிக்ரமாவதாரத்தின் மீது ஒரு அதீத ப்ரேமை. திருப்பாவையை ஆரம்பிக்கும் போதும் ஓங்கி உலகளந்த உத்தமன் என்றாள். நடுவில் பதினேழாம் பாசுரத்தில், அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே! என்றாள். இங்கே அன்றிவ்வுலகம் அளந்தாய் என்று த்ரிவிக்ரமனை மூன்று முறை அனுசந்தித்திருக்கிறாள்.</p>
<p>அன்று மஹாபலியை அடக்க மூன்று உலகத்தையும் ஈரடிகளால்  அளந்தாய். நடந்த கால்கள் நொந்தவொ எனும்படியாக அந்த பாதங்கள் காடுமேடுகளெல்லாம், துஷ்டர்கள் சிஷ்டர்கள் மீதெல்லாம் படர உலகளந்தாயே! அந்த திருப்பாதங்கள் போற்றி! ஆஸ்ரித விரோதிகளான ராவணாதிகளை அவர்கள் இடத்திற்கே சென்று ஜெயித்தாயே ! உன் திறல் போற்றி! அசுரன் சகடத்தில் ஆவேசித்த போது, சகடத்தை பொன்ற உதைத்தாயே! &#8216;தாயுங்கூட உதவாத தஸையிலே அனாயாஸேன திருவடிகளாலே ஸகடாசுரனை அழித்த புகழ்!&#8217; என்று பூர்வாசார்யர்கள் போற்றுகிறார்கள்.</p>
<p>வத்ஸாசுரன், கபித்தாசுரன் எனும் இரு அரக்கர்கள் கன்றுக்குட்டியாகவும், விளா மரமாகவும் வந்து நிற்க, கன்றையே கோலாகக்கொண்டு விளாமரத்தை அடித்து இரண்டு அரக்கர்களையும் முடித்தான். மாரிசனைப்போல் உயிர்பிழைத்துப் போக விடாமல் வருகிற அரக்கர்களையெல்லாம் மிச்சம் வைக்காமல் அழித்தான். ஆனால் இவர்களுக்கோ வயிறுபிடிக்கிறது - கவலையுறுகிறார்கள். &#8216;ஸத்ருவையிட்டு ஸத்ருவையெரிந்தால் ஸங்கேதித்து வந்து இருவருமொக்க மேல்விழுந்தார்களாகில் என் செய்யக்கடவோம்&#8217; என்று பதைத்தார்களாம். இந்த அரக்கர்களை அழித்த வ்ருத்தாந்தத்தை ஆசார்யர்கள் இப்படி அனுபவிக்கிறார்கள், கன்றை பிடித்துக் கொண்டு த¡னும் சுழன்று கன்றை வெகுவேகமாக விட்டெறிந்தானாம் - அப்போது ஒரு காலை குஞ்சித்த பாதமாக தூக்கியபடியால் சிவந்த பாதங்கள் கண்ணில் பட, கழல் போற்றி என்றார்கள்.</p>
<p>அடுத்து அவன் குண விசேஷத்தை சொல்கிறார்கள். இந்த்ர பூஜையை க்ருஷ்ணனுக்கு செய்தது பிடிக்காத இந்திரன், &#8216;கையோயுந்தனையும் வர்ஷிக்க&#8217; என்றபடி விடாது மழை பொழிவிக்க, கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாக பிடித்து கோபாலர்களை காத்தான். ஆஸ்ரிதர்களுக்குள் விரோதமேற்பட்ட காலத்தில், தனது ஆந்ருஸம்ஸய குணம் வெளிப்பட (பெருந்தன்மையுடனான கருணை), இந்த்ரனை அழிக்கப்புகாமல் பொறுத்தான். அந்த குணம் போற்றி என்று பாடுகிறார்கள்.</p>
<p>பல்லாண்டு ப்ரபந்தத்தில் பெரியாழ்வார், வடிவார் சோதிவலத்துறையும் சுடாராழியும் பல்லாண்டு என்பது வரை  சொன்னவர் ஐயகோ! நம் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறதே! என்று முகத்தை திருப்பிக்கொண்டாராம். படைபோர் புக்குமுழங்கும் &#8216;அப்&#8217;பாஞ்சசன்னியமும் பல்லாண்டே! என்றார். முகத்தை திருப்பிக்கொண்டு &#8216;அந்த&#8217; பாஞ்சசன்னியமும் பல்லாண்டு என்று சொன்ன பக்த சிரோமணி அவர். அவர் மகளான ஆண்டாள், இங்கே அதே பாவத்தில், பகைவரை வென்று கெடுக்கும் வேல் போற்றி</p>
<p>என்று அவன் ஆயுதத்தை போற்றுகிறாள். அவன் புகழை வேலுக்கும் ஏற்றிச் சொல்கிறாள். கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரனல்லவா! அதனால் இவனும் கூர்வேல் பிடித்த கையன் தான்.</p>
<p>பகவானின் நடையழகை ரசித்தபடி பாடிவந்த ஆண்டாள், முத்தாய்ப்பாக &#8216;உன் சேவகமே யேத்திப்பறை கொள்வான் வந்தோம் இன்று இரங்கு&#8217; என்று சொல்லி முடிக்கிறாள். இப்படி உன்னை போற்றி பாடுவதையே பரம ப்ரயோஜனமாக கொள்ள வந்தோம், நீ அதற்கு இரங்கி அருளுவாய் என்று கேட்டு முடிக்கிறாள்.</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/bhakthi.wordpress.com/73/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/bhakthi.wordpress.com/73/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/bhakthi.wordpress.com/73/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/bhakthi.wordpress.com/73/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/bhakthi.wordpress.com/73/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/bhakthi.wordpress.com/73/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/bhakthi.wordpress.com/73/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/bhakthi.wordpress.com/73/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/bhakthi.wordpress.com/73/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/bhakthi.wordpress.com/73/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/bhakthi.wordpress.com/73/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/bhakthi.wordpress.com/73/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=bhakthi.wordpress.com&blog=2280837&post=73&subd=bhakthi&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://bhakthi.wordpress.com/2008/01/09/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-24-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%95/feed/</wfw:commentRss>
	
		<media:content url="http://a.wordpress.com/avatar/srikkanthan-128.jpg" medium="image">
			<media:title type="html">Srikanth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருப்பாவை 23 - மாரிமலை முழைஞ்சில்</title>
		<link>http://bhakthi.wordpress.com/2008/01/08/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-23-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%88/</link>
		<comments>http://bhakthi.wordpress.com/2008/01/08/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-23-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%88/#comments</comments>
		<pubDate>Tue, 08 Jan 2008 05:37:50 +0000</pubDate>
		<dc:creator>Srikanth</dc:creator>
		
		<category><![CDATA[Tiruppavai]]></category>

		<category><![CDATA[தமிழ்ப்பதிவுகள்]]></category>

		<category><![CDATA[திருப்பாவை]]></category>

		<category><![CDATA[பக்தி]]></category>

		<category><![CDATA[வைஷ்ணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://bhakthi.wordpress.com/2008/01/08/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-23-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%88/</guid>
		<description><![CDATA[மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!
இதற்கு முந்தைய &#8216;அங்கண் மாஞாலத்தரசர்&#8217; பாசுரத்தில், ஆண்டாள் இதர பாகவத பெண்பிள்ளைகளோடு, பிராட்டியை முன் வைத்து, பகவானை நெருங்கி உன் சிவந்த கண்களை சிறிது சிறிதாக திறந்து எங்கள் மேல் உன் கடாக்ஷத்தை - கடைக்கண் பார்வையை செலுத்த வேண்டும் என்று கேட்க, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><font color="#008000">மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்<br />
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து<br />
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி<br />
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்<br />
போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்<br />
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய<br />
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த<br />
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!</font></p>
<p>இதற்கு முந்தைய &#8216;அங்கண் மாஞாலத்தரசர்&#8217; பாசுரத்தில், ஆண்டாள் இதர பாகவத பெண்பிள்ளைகளோடு, பிராட்டியை முன் வைத்து, பகவானை நெருங்கி உன் சிவந்த கண்களை சிறிது சிறிதாக திறந்து எங்கள் மேல் உன் கடாக்ஷத்தை - கடைக்கண் பார்வையை செலுத்த வேண்டும் என்று கேட்க, பகவான் எழுந்திருக்கிறான். இந்த பாசுரத்தில் அவன் எழுந்திருக்கும் அழகை, தன் பெடையொடு குகையிலே படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வருவதை உபமானமாகச் சொல்லி ரசிக்கிறார்கள்.</p>
<p>இங்கே சிங்கத்தை சொன்னது யாதவ சிம்ஹமான க்ருஷ்ணன், தன் பராபி பவந சாமர்த்தியம் தோற்ற, வீரம் வெளிப்பட எழுவதை சிறப்பாக எடுத்துரைக்கிறது. மாரி - மழை பெய்கிறது - அதுவும் பனியே மழைபோல் பெய்யும் மார்கழிக்காலம் - ஆண்டாள் முன்னமே ஒரு பாட்டில் - பனித்தலை வீழ என்று சொன்னபடி பனிவிழும் மார்கழியாம். முழைஞ்சில் என்பது குகை. அப்படி குளிர் நடுக்குகிற, பனி - மழை போல் பெய்து கொண்டிருக்கிற மார்கழி மாத காலத்தில், தன் குகையில் - மன்னிக் கிடந்துறங்கும் - சோம்பலை அள்ளி பூசிக்கொண்டு தன் பெடையொடு அணுஅளவும் விலகாமல் படுத்துத் தூங்குகிறதாம் சிங்கம்.</p>
<p>அது மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அறிவுற்று - அதுவரை அசையாமல் இருந்தது - திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து, தீவிழித்து - உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து விழித்த விழிகள் - வேரிமயிர் பொங்க - ஜாத்யுசித பரிமளம் என்கிற விலங்கு ஜாதிக்குரிய மணம் கமழ - தனது வாசனையுள்ள பிடரி மயிர்களை உதறி, வெப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து - உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்து, பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்து சோம்பலை உதறுகிறதாம். பிற